Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 03 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தம் சனிக்கிழமையுடன் (1) முடிவடைந்த நிலையில், காசாவுக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட இதர பொருட்கள் நுழைவதை, ஞாயிற்றுக்கிழமையுடன் (2) நிறுத்திவிட்டதாக, இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - காசாவுக்கு இடையே நடந்து வந்த போர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் வற்புறுத்தலால், நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருநாடுகளும் ஜனவரி 19ஆம் திகதி போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.
ஒப்பந்தப்படி இஸ்ரேல்-காசா இடையே பணய கைதிகள் பறிமாற்றம் நடந்தது. இந்த ஒப்பந்தப்படி பல கட்டங்களாக ஏராளமான பணயகைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இன்னும் பல பணய கைதிகளை விடுவிக்க வேண்டி உள்ளது.
இந்த சூழலில் இரு தரப்பினரும் இன்னும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் "அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறது, காசா போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை" என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தம் சனிக்கிழமையுடன் (1) முடிவடைந்த நிலையில் காசாவுக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட இதர பொருட்கள் நுழைவதை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமையுடன் (2) நிறுத்திவிட்டதாக அறிவித்தது.
போர் நிறுத்தத்தை நீட்டிக்க அழுத்தம் தரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் "அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்துடன் பேசிய பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக, ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago