2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

எத்தியோப்பிய மண்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2024 ஜூலை 23 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 157ஆக உயர்வடைந்துள்ளது.

எத்தியோப்பியா கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழை காரணமாகவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .