2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

இஸ்ரேல் பணயக்கைதிகள் சடலங்களை ஒப்படைத்த ஹமாஸ்

Freelancer   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவதை ஒட்டி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளில் நான்கு பேரின் சடலங்களை நேற்று (26) ரெட் கிராஸிடம் ஒப்படைத்தது.

ரெட் கிராஸிடம் ஹமாஸ் நான்கு பேரின் உடல்களை ஒப்படைத்ததை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். எகிப்து இடைத்தரகர்கள் உதவியோடு நான்கு பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நான்கு பேரை அடையாளம் காணும் பணிகள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நான்கு பேரின் உடல்கள் வழங்கப்பட்ட அதே நேரத்தில் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை ரெட் கிராஸ் வாகனம் ஏற்றிவந்தது. பாலஸ்தீனர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெய்துனியாவில் கூடினர். ரெட் கிராஸ் வாகனம் தங்களை நோக்கி வருவதை கண்ட அவர்கள் கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கும் முறையை கண்டித்து பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஹமாஸ், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .