Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 03 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜோர்டானிய வீரர்களால் இஸ்ரேல் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் கேரள மாநிலத்தை சேர்ந்த கேப்ரியல் பெரேரா (வயது 47) என்பவர் ஆவார்.
கேரளாவின் தும்பா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தகவலை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் சடலத்தை மீட்டு, கேரளாவிற்கு கொண்டு வரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரான பெரேரா, ஜோர்டானுக்கு விசிட்டர் விசாவில் வந்துள்ளார். பின்னர் ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போதுதான், ஜோர்டானிய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பெரேராவின் உறவினர் எடிசனும் அவருடன் சேர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்று இருக்கிறார். எனினும், இவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயத்துடன் உயிர் தப்பினார். சிகிச்சைக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு மேற்கு கரையில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் - இஸ்ரேல் எல்லை மிகவும் பதற்றமாக உள்ளது. இத்தகைய சூழலில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago