2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆப்கானிஸ்தானில் படகு விபத்து: 20 பேர் பலி

Freelancer   / 2024 ஜூன் 01 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள ஆற்றில் படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் உட்பட 5 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படகில் 26 பேர் பயணித்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .