2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வெளவால்களில் இருந்து பரவும் ’நிபா’ வைரஸ்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், வெளவால்களில் இருந்து அந்த வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த ஜூனில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் மாதிரி, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஜூலை 21ஆம் திகதி சிறுவன் உயிரிழந்தான்.

பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியில் இருந்த கடை ஒன்றில் இருந்து சிறுவன் பழம் வாங்கி சாப்பிட்டதும், அந்த கடையில் வெளவால்கள் நடமாட்டம் இருந்ததும் சுகாதார துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சிறுவன் வசித்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்த வெளவால்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், வெளவால்களில் இருந்து நிபா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “சிறுவன் பழம் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் பகுதியில் இருந்து 27 வெளவால்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், ஆறு வெளவால்களில் நிபா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 472 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில், அவர்களில் யாருடைய உடலிலும் நிபா வைரஸ் இல்லை.

இருப்பினும், நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 261 பேர், 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .