2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Freelancer   / 2024 ஜூலை 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆவடியில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறைப் பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதுகாப்புப்பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த படை வளாகத்தில் உள்ள விமானப்படை பிரிவில் மயிலாடுதுறையை சேர்ந்த காளிதாஸ் (55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் வழக்கம்போல விமானப்படை பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வளாகத்தில் உள்ள மற்ற வீரர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது காளிதாஸ் தொண்டையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார்.

துப்பாக்கியால் தொண்டையில் சுட்டுக் கொண்ட காளிதாஸ், 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து முத்தா புதுபேட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காளிதாஸ் பணிபுரிந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X