2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

லுங்கியில் வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை

Editorial   / 2024 மே 26 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டம் போட்ட நீலநிற லுங்கி, அதற்கு மேலே டீ-சட்டை, கண்களில் கறுப்புக் கண்ணாடி. அணிந்தவாறு லண்டன் தெருக்களில் பவனி வந்த வேலரி, அதைக் காட்டும் காணொளியை இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்தார்.

அதையடுத்து, வேலரியின் துணிச்சலை இணையவாசிகள் பாராட்டித் தள்ளினர். ஒருவர் அணியும் ஆடை, அவரின் கலாசார அடையாளத்தின் வெளிப்பாடு எனலாம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பு அமைவதில்லை.

இருப்பினும், தனது தென்னிந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக லண்டனில் பல ஆண்டுகளாக வசித்துவரும் வேலரி செய்த இந்தச் செயல், சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

பிரிட்டனில் இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வகையில் அவரின் செயல் அமைந்துள்ளதாகவும் இணையவாசிகள் கூறினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .