Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 21 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தா பெண் வைத்தியர் கொலை சம்பவ குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்றும் நீதிபதி கருத்து கூறி உள்ளார்.
இந்த தண்டனை விவரங்கள் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.
குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“ஆர்.ஜி. கர் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பில் அரிதான வழக்கு அல்ல என்பதைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்! மரண தண்டனையை கோரும் அரிதான வழக்கு இது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அரிதான வழக்கு அல்ல என்று தீர்ப்பு எப்படி வந்தது?
“சமீபத்தில், கடந்த 3 (அ) 4 மாதங்களில், இதுபோன்ற குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்ய முடிந்தது. ஏன்? இந்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்படவில்லை. இது மரண தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.
“குற்றவாளியின் மரண தண்டனைக்காக நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago