2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நள்ளிரவில் வெடித்து சிதறிய வீடுகள்

Freelancer   / 2024 நவம்பர் 26 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசம் மாநிலம், முரைனா நகரில், திங்கட்கிழமை (25) நள்ளிரவில், 3 வீடுகள் திடீரென வெடித்து சிதறியதில், 2 இரண்டு பெண்கள் ஸ்தலத்திலேயே  உயிரிழந்தனர். 

மேலும் இச்சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

ரத்தோர் காலனியில் நடந்த இச்சம்பவத்தில், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மேலும் வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று, பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X