Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 11 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதல் தோல்வியால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள கொள்ள தண்டவாளத்தில் படுத்த பெண், அங்கேயே படுத்து உறங்கிய வினோத நிகழ்வு பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருகையில், பீகார் மாநிலத்தின் மோதிஹாரி பகுதியில் இருந்து முசாபர்பூர் பகுதிக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் சக்கியா ரயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் திடீரென பதற்றமடைந்தார்.
அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை வேகமாக நிறுத்தினார். அப்போது ரயிலுக்கும் அவரது உடலுக்கும் சில அடி தூரமே இருந்துள்ளது. பின்னர் ரயில் ஓட்டுநர் அரண்டு போய், நேராக இறங்கிச் சென்று யார் படுத்திருப்பது என்று அருகில் சென்று பார்த்தார்.
அப்போது வெள்ளை உடை அணிந்த இளம்பெண் ஒருவர் படுத்திருப்பதை கண்டு புரியாமல் தவித்தார். அந்த பெண் இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்று உற்றுபார்க்க, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
அடுத்த கணமே அந்த இளம்பெண்ணை உலுக்கி ரயில் ஓட்டுநர் எழுப்பி இருக்கிறார். சில நிமிடங்களுக்கு பின் யோசனையுடன் எழுந்த அந்த பெண் என்னவென்று புரியாமல் தவித்துள்ளார். ரயில் ஓட்டுநர் எதற்காக இங்கு படுத்திருக்கிறாய் என்று கேள்வி கேட்க, அதன் பின்னர் தான் முழு விவரமும் வெளிவந்திருக்கிறது.
தண்டவாளத்தில் படுத்திருந்த இளம்பெண் ஒருவரை மனதார காதலித்து, திருமணம் முடிக்க விரும்பி உள்ளார். ஆனால் இவரின் இந்த காதலுக்கு பெற்றோர் குறுக்கே நிற்க, எவ்வளவோ போராடி பார்த்தும், காதலுக்கு பச்சைக் கொடி காட்டாமல் பெற்றோர் மல்லுக்கட்டி உள்ளனர்.
என்ன செய்வது என்று புரியாமல் தவித்த அந்த பெண், தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானித்து, ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். ஆனால் பட்டப்பகலில் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள படுத்திருந்த அவருக்கு, திடீரென தூக்கம் வர, அங்கேயே நன்றாக படுத்து தூங்கி இருக்கிறார். இந்த முழு விவரத்தையும் கேட்ட ரயில் ஓட்டுநர் அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு பெண்ணின் வீட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் விரைந்து வந்த பெண்ணின் உறவினர்கள் அவரை தங்களுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது சீற்றமடைந்த பெண், அவர்களுடன் செல்ல மறுத்து மீண்டும் தண்டவாளத்தில் படுக்க எத்தனித்துள்ளார்.
இரண்டு அடி கொடுத்த அவர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். நல்வாய்ப்பாக உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநருக்கும் அவர்கள் மறவாமல் நன்றி தெரிவித்துச் சென்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago