2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஜெர்மனியில் பொறியியலாளர்: பெங்களூருவில் யாசகர்

Editorial   / 2024 நவம்பர் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்​களூருவை சேர்ந்த சமூக வலைதள பயனர் ஷரத் அண்மை​யில் யாசகர் ஒருவரை பற்றிய வீடியோவை தனது இன்ஸ்​டாகிராம் பக்கத்​தில் பகிர்ந்​தார்.

பெங்​களூரு ஜெயநகர் சாலை​யோரத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அந்த வீடியோ​வில் பேசிய நடுத்தர வயதுடைய ஆண், ''நான் ஜெர்​மனி​யில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் நகரில் 2013-ம் ஆண்டு பொறி​யாளராக பணியாற்றினேன். அப்போது அங்கு எம்.எஸ். முடித்​தேன். பின்னர் க்ளோபல் வில்​லேஜில் மைண்ட் ட்ரீ நிறு​வனத்​தில் நல்ல சம்பளத்​தில் வேலை​யில் இருந்​தேன். பின்னர் பெங்​களூரு திரும்பி ஒரு பன்னாட்டு நிறு​வனத்​தில் பெரிய பொறுப்​பில் இருந்​தேன்.

அப்போது ஒரு பெண்ணை காதலித்த வந்த நிலை​யில், ஒரு மோசமான சம்பவத்​தால் எல்லா​வற்​றை​யும் இழந்​தேன். எனது வேலை பறிபோன நிலை​யில், காதலும் தோல்​வி​யில் முடிந்​தது. திடீரென எனது பெற்​றோரை​யும் இழந்​த​தால், நடுத்​தெரு​வுக்கு வந்து​ விட்​டேன். இப்போது மதுபோதைக்கு அடிமை​யாகி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்து​கிறேன்'' என விரக்​தி​யோடு கூறினார். இந்த வீடியோ​வில் அவர் தனது வாழ்க்கையை ஆங்கிலத்​தில் விவரித்து கூறியது பார்​வை​யாளர்களை ஈர்த்​துள்ளது. சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளியாகி வேகமாக பர​வி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X