2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காசியில் வீடுகள் இடிந்ததில் ஒருவர் பலி; 8 பேர் மாயம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசி விஸ்வநாதர் கோவில் அருகே இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமானதில் ஒருவர் பலியான நிலையில், இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

உத்தரபிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இன்று (06) இடிந்து தரைமட்டமாகியதில் இடிபாடுகளில் 8 பேர் சிக்கினர். இதன்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனதில்  5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும், மீட்பு பணியின் போது, காயமடைந்த ஒரு பொலிஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 8 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக, வீடு இடிந்து விழுந்துள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .