2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை

Freelancer   / 2024 ஜூலை 22 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரியானா மாநிலத்தில், தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற முன்னாள் இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்சினையில், சகோதரன் ஹரிஷ் (வயது 35), மனைவி சோனியா (வயது 32), தாய் சரோபி (வயது 65), ஐந்து வயது மகள் மற்றும் ஆறு மாத மகன் உட்பட 5 பேரை முன்னாள் இராணுவ வீரர் பூஷன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். காயமடைந்த தந்தை ஓம் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், சந்தேக நபரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X