2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இளைஞனின் சடலத்தை வாங்க மறுக்கும் உறவினர்கள்

Freelancer   / 2025 ஜனவரி 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி, செவ்வாய்க்கிழமை (14)  நடைபெற்றது.இதில், மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் (23) என்ற இளைஞன் மாடுபிடி வீரராக களம் இறங்கினார். 

போட்டியில் காளை முட்டியதில் அவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, புதன்கிழமை (15) உயிரிழந்தார்..

 சடலத்தை, பிரேதப் பரிசோதனைக்கு பின்னர்,புதன்கிழமை (15) உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது, ஜல்லிக்கட்டில் உயிரிழந்த குறித்த இளைஞனுக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்தப் போராட்டத்தால், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நெருக்கடியையும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

அதனால், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொலிஸார் உயிரிழந்த இளைஞனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதல்வர் ஸ்டாலின், புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .