2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

மகாசிவராத்திரிக்கான ஆறுநாள் பாதயாத்தி​​ரை

Freelancer   / 2025 பெப்ரவரி 25 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சைவத்திருச்சபையின் ஏற்பாட்டில் ஒன்பதாவது வருடமாக மகாசிவராத்திரியை முன்னிட்டு, யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து நல்லூர் சென்று ஆரம்பமாகிய திருக்கேதீஸ்வரத்திற்கான ஆறுநாள் பாதயாத்திரை ​ (26) புதன்கிழமை திருக்கேதீச்சரத்தை சென்றடைகிறது.
 
உலக சைவதிருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் ஸ்ரீ சுமுகலிங்கம் தலைமையில் நடைபெறும் இப் பாதயாத்திரை  செவ்வாய்க்கிழமை(25)  காலை பாப்பாமோட்டையை சென்றடைந்து.
 
 கதிர்காம பாதயாத்திரீகர் குழுத்தலைவர்  வேல்சாமி ஜெயராஜா தலைமையிலான
குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.
 
 கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதற்கான விசேட பூஜையும் வழிபாடும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடைபெற்றது.
சந்நிதியிலிருந்து  வெள்ளிக்கிழமை பூஜை  முடிந்தகையோடு மாலை நல்லூருக்கான பாதயாத்திரை ஆரம்பமாகி 10 மணியளவில் சென்றடைந்தது.
 
சுமார் 30 பக்தர்கள் ஆறுநாட்களின்பின்னர் நா​​ைள சிவராத்திரியன்று திருக்கேதீஸ்வரத்தை அடைந்து மகாசிவராத்திரி விரதம் அனுஸ்ட்டிப்பார்கள்.
வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X