2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் குடும்பஸ்தர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன், எம்.ஏ.றமீஸ்

அக்கரைப்பற்று, பதுர்நகர் கடற்கரையை அண்டியப் பிரதேசத்தில் வைத்து நேற்று (11) மாலை ஹெரோய்ன் போதைபொருளுடன் 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

அம்பாறை பிராந்திய  பொலிஸ் மோசடி குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உதவி பொலிஸ் பரிசோதகர் எம்.டீ.தேசப்பிரிய தலைமையிலான அறுவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேகநபரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .