Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகப் பிற்போடப்பட்ட கிழக்கு மாகாண, இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம், நாளை (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதென, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஜே.ஜே. முரளிதரன், கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
2018 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்த குறித்த இடமாற்றங்கள், தேர்தல் காரணமாக இன்று 28ஆம் திகதிக்குத் தற்காலிகமாகப் பிற்போடப்பட்டன.
இது குறித்து, கிழக்கு மாகாண பிரதிப் பிரதிச் செயலாளர் ஜே.ஜே. முரளிதரனால் கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கும், சகல செயலாளர்களுக்கும் ஏற்கெனவே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றக் கட்டளை, தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய பிற்போடப்பட்டிருந்தது என, பிரதிப் பிரதம செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்துக்காக ஏற்கெனவே கோரப்பட்ட விண்ணப்பத்துக்கமைவாக, மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவை, மொழிபெயர்ப்பாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணிப்பாளர் சேவை என்பவற்றைச் சேர்ந்தவர்களே, வருடாந்த இடமாற்றத்துக்கு உட்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago