Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை - மாளிகைக்காடு பிரதேசத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் கல்வி கற்றதாக காண்பித்து போலியான கல்விச் சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அதன் உரிமையாளரை, எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை பெரும் குற்றப்பிரிவு பொலிஸிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று (24) கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை, சம்மாந்தறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (25) ஆஜர்செய்த போது, எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணையை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago