2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், நேற்று (27) பல்கலைக்கழக நிருவாக கட்டடத்துக்கு முன்னால் ஒலுவில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் வியாழக்கிழமை (27) மாலை பல்கலைக்கழக எல்லைக்குள் கடற்கரையில் இருந்த போது அங்கு சென்ற இளைஞர் குழுவொன்று மாணவன் ஒருவரை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, பல்கலைக்கழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சக மாணவரை தாக்கிய நபர்களுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

சம்மந்தப்பட்டவர்களை உடனடி கைது செய், பல்கலைக்கழகத்தை பாதுகார், பல்கலைக்கழக நிருவாகத்தினரே பாராபட்சம் காட்டாதே போன்ற பாதாதைகளை ஏந்திய வண்ணம், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .