Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று (28) முதல் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனரென, பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.
மொழித் தேர்ச்சிக் கொடுப்பனவு, காப்புறுதிச் சேவைகள், சொத்துகளுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் என்பவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறே, தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிச்சங்க சம்மேளனம் ஏற்பாட்டில், அனைத்துப் பல்கலைக்கழங்கங்களிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து, தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனரெனவும் எம்.எம். நௌபர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக, அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்ளேமனம், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு கிடைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.
அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதிப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து, கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, இந்தத் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வேலைநிறுத்தம் மேலும் தொடருமாயின், எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த ஊழியர்கள், கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழகங்கள் மானியங்கள் நோக்கிப் பேரணியாகச் சென்று, அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், ஊழியர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago