Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 ஜூன் 10 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டி திருடப்படுவதாக முறைப்பாடுகள் சில கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பெரிய நீலாவணை பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் ஆண், பெண், சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், பிரதான சந்தேக நபர் தலைமைறைவாகி உள்ள நிலையில், பாண்டிருப்பு மற்றும் துறைநீலாவணை பகுதிகளில் களவாடப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் பல விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
எனவே திருடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்து உடைமையில் வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரை அணுகி ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் தத்தமது உடைமை குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த மாதம் பெரியநீலாவணைக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளான மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் துவிச்சக்கரவண்டிகள் பல களவாடப்பட்டிருந்த நிலையில்,
குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில், பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும், உப பொலிஸ் பரிசோதகருமான டி.டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொதுமக்களை பெரியநீலாவணை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
5 hours ago