Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூக்கக் கலக்கத்தில், 4 வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று, திருக்கோவில் - காயத்திரி கிராமத்தில், இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
விஜயதீபன் தீபிகா என்ற சிறுமியே, இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாயும், சிறுமியும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்ததாகவும் இந்நிலையில், சிறுமி தூக்கத்தில் இருந்து எழுந்து, வௌியே வந்தவேளை, முற்றத்தில் இருந்த நில மட்டத்துடன் காணப்பட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை காப்பாற்றி, திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில், சிறுமி உயிரிழந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago