Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்றும் நாளையும், 48 மணித்தியால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொழித்தேர்ச்சிக் கொடுப்பனவு, காப்புறுதிச் சேவைகள், சொத்துகளுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் என்பவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்படவேண்டுமென, கல்விசாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கைகளுக்கு இதுவரையில் சரியான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியுமே இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்தார்.
மேற்படி கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வு வழங்காவிடின், அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்மேளனம், அனைத்துப் பல்கலைக்கழங்கங்களிலும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025