2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

1,008 காயகல்ப மூலிகைகளை கொண்ட யாகம்

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 01 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் 1,008 காயகல்ப மூலிகைகளை கொண்ட அதிசக்தி வாய்ந்த பிரளய காளி மகாயாகம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் “சித்தர்களின் குரல்” சிவசங்கர் ஜயா உள்ளிட்ட பல சித்தர்கள் கலந்துகொண்டு மகா யாகத்தை நடத்தி வைப்பதுடன், அடியவர்களுக்கான அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காகப் பிரார்த்தித்து வருடத்தில் ஒருமுறை நடைபெறும் இம்மகா யாகத்தில் பக்தர்கள்  கலந்துகொள்ளுமாறு, ஆலய நிருவாகத்தினர் அழைக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .