Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 14 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் கெவிளியாமடுப் பகுதியில் அம்பாறை - கண்டி பிரதான வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11), பட்டிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் காரியாலய அலுவலர்கள் சென்றபோது, மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்குவான அம்பிட்டிய சுமரணத்தின தேரர், பிரதேச செயலாளருக்கும் கிராமசேவை அதிகாரிக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால், தமிழர்கள் புலிகள் எனவும் பறத் தமிழன் எனவும் தூசண வாரத்தைகளால் திட்டித்தீர்த்தார்.
சம்பந்தப்பட்ட புத்தபிக்கு, அத்துமீறிக் காணி அபகரிப்புச் செய்வதைத் தடுக்கும் விதத்தில் நேரடியாகப் பார்வையிட பிரதேச செயலாளரும் காரியாலய உத்தியோகத்தர்களும் அங்கு சென்றபோதே, மிகவும் கீழ்தரமான முறையில் குறித்த புத்தபிக்கு, இவ்வாறு தமிழ் இனத்தை இம்சித்துள்ளார்.
(ஒளிப்பதிவு : ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
P.Shanmugam Wednesday, 16 November 2016 03:58 AM
Immediately government take action against him . He is creating a problem with Both parties.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago