Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்றின் சிற்றுண்டிச்சாலை அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் பழ விநியோகத்தரிடம் குறித்த அதிகாரி இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விநியோக பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொது செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் கடுவலை யில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago