Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 மே 04 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1904: பனாமா கால்வாய்க்கான கட்டுமானம், ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1919: மே நான்கு இயக்கம் - சீனாவின் பிராந்தியங்கள், ஜப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து, தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தியானன்மென் சதுக்கத்தில், மாணவர் போராட்டமொன்ற நடத்தப்பட்டது.
1926: ஐக்கிய இராச்சியத்தில், பொது வேலைநிறுத்தம் ஆரம்பமானது.
1930: மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு, யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானால் முதல் நாள் கைப்பற்றப்பட்ட துளகிதீவு மீது, அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் ஆம்பூர்க் நகரிலிருந்த நியூவென்காம் வதை முகாமை, பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
1945: இரண்டாம் உலகப் போர் - வடக்கு ஜேர்மனி, பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1949: அகில மலாயா தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ்.ஏ.கணபதி, மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால், கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
1949: இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில், டொரினோ கால்பந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1953: ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக, புலிட்சர் பரிசு பெற்றார்.
1959: முதலாவது கிராமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1978: தென்னாப்பிரிக்கப் பாதுகாப்புப் படைகள், தெற்கு அங்கோலாவின் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி, 600 பேரைக் கொன்றனர்.
1979: மார்கரெட் தட்சர், ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
1990: லாத்வியா, சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.
1994: இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசிர் அரஃபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி, காசாக் கரையில், பாலஸ்தீனியர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
2002: நைஜீரியாவின் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 148 பேர் கொல்லப்பட்டனர்.
2021: மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரபல செல்வந்தருமான பில்கேட்ஸ் தனது மனைவி மெலின்டாவுடனான 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago