Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 01 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
1884: ஐக்கிய அமெரிக்காவில், எட்டு மணிநேர வேலைநாள் வேண்டி, பொது அறிவிப்பு வெளியானது.
1886: ஐக்கிய அமெரிக்காவில் 8 மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி, வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள், பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1900: ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.
1915: லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள், அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில், 1,198 பேர் உயிரிழந்தனர்.
1925: சீனாவில் அனைத்துச் சீனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று, 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.
1929: ஈரான் – துருக்மெனிஸ்தான் எல்லையை, 7.2 ரிச்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில், 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.
1944: இரண்டாம் உலகப் போர் - 200 கம்யூனிசக் கைதிகள், ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸும் அவரது மனைவி மேக்டா பியூரரும், பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்துகொண்டனர். இவர்களது பிள்ளைகளும், தாயினால் சயனைட் பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1945: இரண்டாம் உலகப் போர் - செஞ்சேனையின் முன்னேற்றத்தை அடுத்து, ஜேர்மனியின் தெம்மின் என்ற இடத்தில், 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர்.
1946: மேற்கு அவுஸ்திரேலியாவின் பில்பாரா என்ற இடத்தில், அவுஸ்திரேலியப் பழங்குடிகள், மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 3 ஆண்டுகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1950: குவாம் - ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.
1956: யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி, பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
1956: மினமாட்டா என்ற கொள்ளை நோய், அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
1960: குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
1961: கியூபாவை, சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
1977: தொழிலாளர் நாள் நிகழ்வின் போது, துருக்கியின் இஸ்தான்புல் நகரில், 36 பேர் கொல்லப்பட்டனர்.
1978: ஜப்பானியர் நவோமி யூமுரா, தன்னந்தனியாக வடமுனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.
1987: இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண் மதகுரு ஈடித் ஸ்டெயின், பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.
1989: இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து, விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.
1993: இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா மே தினப் பேரணியில் கலந்துகொண்டிருந்த போது, மனிதக் குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். டிங்கிரி பண்டா விஜயதுங்க, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004: சைப்பிரஸ், செக் குடியரசு, எசுத்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலோவாக்கியா,, சுலோவீனியா ஆகிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2009: சமப்பால் திருமணம், சுவீடனில் சட்டபூர்வமாக்கப்பட்டது.
2011: பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - அல் கொய்தா தலைவர் உசாமா பின் லாடன், ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
59 minute ago
59 minute ago