Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 16 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
1906: சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 3886 பேர் பலியாகினர்.
1913: ஜப்பானில் பல்கலைக்கழகத்திற்கு முதல் தடவையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1945: ஜப்பானிய பிரதமர் கன்டாரோ சுசுகியை படுகொலைசெய்வதற்கு முயற்சிக்கப்பட்டது.
1945: சீனாவின் கடைசி மன்னனான மன்சுகுவோ, சோவியத் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1946: இந்தியாவின் கொல்கத்தா நகரில் பாரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் 72 மணித்தியாலங்களில் சுமார் 4000 பேர் பலியாகினர்.
1960: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1960: அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் கிட்டின்ஜர் 102,800 அடி உயரத்திலிருந்து பரசூட்டில் குதித்து சாதனை படைத்தார்.
1962: இந்தியாவில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
1963: பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கியதில் 11,000பேர் உயிரிழந்தனர்.
1966: நாசாவின் 12ஆவது மனிதரைக் கொண்டுசென்ற ஜெமினி 8 விண்கலம் ஏவப்பட்டது.
1968: வியட்நாம் போர் - மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1969: வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் உயிரிழந்தனர்.
1985: அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன், பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991இல் விடுதலை ஆனார்.
1988: ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2003: உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீன் சவூதி அரேபியாவில் காலமானார்.
2006: மனித உரிமைகளுக்கான ஐ.நா அமைப்பை உருவாக்குவதற்கு ஐ.நா.வின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago