Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 24 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1505: போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.
1567: இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான்.
1911: பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.
1915: சிகாகோ நதியில் கப்பலொன்று கவிழ்ந்ததால் 844 பேர் பலியாகினர்.
1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி, புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.
1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FஈDஏ) பாரிசில் அமைக்கப்பட்டது.
1931: பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48பேர் கொல்லப்பட்டனர்.
1943: இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1969: சந்திரனில் தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் தலைமையிலான விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்.
1969: அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1974: சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.
1977: லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4 நாள் போர் முடிவுக்கு வந்தது.
1982: ஜப்பானில் மண்சரிவினால் பாலமொன்று உடைந்ததால் 299 பேர் பலி.
1991: இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
2001: பண்டாரநாயக்க விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி பல வான்கலங்களை அழித்தனர்.
2005: டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியில் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தொடர்ச்சியாக 7 ஆவது தடவையாக வென்றார்.
2007: லிபியாவில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago