Freelancer / 2023 ஜூன் 10 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
1935 : 1922 முதல் போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன.
1940 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் - பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 : இரண்டாம் உலகப் போர் - கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1945 : ஆத்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

1956 : இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1957 : கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.
1967 : இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.
1984 : தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
1982 : சிரிய அரபு இராணுவம் லெபமானில் இஸ்ரேலியப் படையினரை தோற்கடித்தனர்.
1986 : மண்டைதீவுக் கடல் படுகொலைகள் – யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 : இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
1996 : வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1997 : கெமர் ரூச் தலைவர் போல் போட் வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென் மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.
1998 : முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25 க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
1999 : கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.
2002 : இரண்டு மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் முதல் நேரடி மின்னணுத் தொடர்புப் பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் கெவின் வாரிக் என்பவரால் நடத்தப்பட்டது.
2003 : நாசாவின் இஸ்பிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2006 : ஈழத்தமிழர் படுகொலைகள், 2006 – மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
2017 : உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025