Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 ஜனவரி 16 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யுலிசீஸ் கிராண்ட் டென்னிசியில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.
1918 – லித்துவேனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1923 – ஹாவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.
1934 – அவுஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1937 – அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: ஜேர்மனிய கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் கார்கீவ் நகரினுள் நுழைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
1945 – இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான 'ஐம்பதுக்கு ஐம்பது' கோரிக்கை தமிழ்க் காங்கிரசு கட்சியால் முன்வைக்கப்பட்டது.
1959 – ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
1962 – மேற்கு ஜேர்மனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய வடகடல் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
1978 – முதலாவது கணினி அறிக்கைப் பலகை சிகாகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1983 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
1985 – இஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1986 – சோவியத் கப்பல் மிக்கைல் லெர்மொந்தோவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
1988 – சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
1991 – நிக்கராகுவாவின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு மனாகுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1996 – சிகாகோ சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்று மேரிலாந்தில் இன்னுமொரு தொடருந்துடன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1998 – தாய்வானில் சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
2007 – 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
2013 – பாக்கித்தான் குவெட்டா நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
48 minute ago
53 minute ago