Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914 : முதலாம் உலகப் போர் - ஜப்பான் ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.
1921 : பிரித்தானிய வான்படைக் கப்பல் ஆர்-38 இங்கிலாந்தில் மூழ்கியதில், 49 பிரித்தானிய, அமெரிக்கப் படையினரில், நால்வர் மட்டுமே உயிர் தப்பினர்.
1929 : பாலத்தீனத்தில் எபிரோன் நகரில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி, அவர்களில் 65 பேரைக் கொன்றனர். ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1939 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
1942 : இரண்டாம் உலகப் போர் - சுடாலின்கிராட் சண்டை ஆரம்பமானது
1943 : இரண்டாம் உலகப் போர் - கார்கீவ் விடுவிக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் - மர்சேய் கூட்டுப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் - உருமேனியா மன்னர் மைக்கேல் நாட்சி - ஆதரவு அரசை ஏற்க மறுத்தார். அரசுத்தலைவர் இயோன் அந்தனெசுக்கு கைது செய்யப்பட்டார். உருமேனியா கூட்டுப் படைகளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தது.
1948 : 44 நாடுகளில் இருந்து 147 திருச்சபைகள் இணைந்து 'திருச்சபைகளின் உலகப் பேரவை' என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
1948 : ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
1966 : 'லூனார் ஆர்பிட்டர் 1' விண்கலம் முதல் தடவையாக நிலாவின் சுற்றுவட்டத்திருந்து பூமியைப் படம் பிடித்தது.
1973 : சுவீடன், ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை ஒன்று பணயக் கைதிகள் விவகாரமாக உருவெடுத்தது. அடுத்த ஐந்து நாட்களில் பணயக் கைதிகள் கொள்ளைக்காரர்களுக்குப் பரிவு காட்ட ஆரம்பித்தனர். இது 'இசுட்டாக்கு கோம் நோய்க்கூட்டறிகுறி' என்ற சொற்றொடரை உருவாக்கியது.
1989 : பாடல் புரட்சி – எசுத்தோனியா, லாத்வியா லித்துவேனியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் மக்கள் வில்னியஸ் – தாலின் நெடுஞ்சாலையில் கைகோர்த்து பாடல்கள் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1990 : ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 : ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
1990 : மேற்கு மற்றும் கிழக்கு ஜேர்மனி ஆகியன அக்டோபர் இல் இணையவிருப்பதாக அறிவித்தன.
1991 : உலகளாவிய வலை பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
2000 : கல்ஃப் ஏர் விமானம் பாரசீக வளைகுடாவின் மனாமா அருகே வீழ்ந்ததில், 143 பேர் உயிரிழந்தனர்.
2006 : நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.
2007 : 1918 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட ரஷ்சியப் பேரரசின் கடைசி அரச குடும்பத்தினரான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் எச்சங்கள் ரஷ்யாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2011 : லிபிய உள்நாட்டுப் போர் - லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபி அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தேசிய இடைக்காலப் பேரவை ஆட்சியைக் கைப்பற்றியது.
2013 : பொலிவியாவில் சான்ட்டா குரூசு டெ லா சியேறா நகரில் இடம்பெற்ற சிறைக் கைதிகளின் கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago