Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூலை 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1911 : செங்கோட்டை வாஞ்சிநாதன், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு உயிரிழந்தார்.
1929 : நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.
1933 : அமெரிக்காவின் கேன்சஸ் நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு, கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்.பி.ஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.
1939 : பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இயூசன் வீடுமேன் என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டார்.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் ஜேர்மானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி, இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1940 : எஸ்த்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இல் இவை விடுதலை பெற்றன.
1944 : ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.
1948 : டக்லசு டிசி - 6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.
1953 : பனிப்போர் - பெர்லினில் கிழக்கு ஜேர்மனி அரசுக்கெதிராக, தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1960 : நே பெர்சு அமெரிக்கப் பழங்குடியினர் 1863 உடன்படிக்கைப்படி, அவர்களது 7 மில்லியன் ஏக்கர் நிலம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, கொள்வனவு செய்யப்பட்டமைக்காக 4 மில்லியன் இழப்பீடு பெற்றனர்.
1963 : தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.
1967 : அணுகுண்டு சோதனை - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.
1985 : டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீஸ் அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.
1991 : தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் - தென்னாப்பிரிக்கர்கள் அனைவரும் பிறப்பின் போது இனவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.
1992 : 'கூட்டு ஆயுதக்குறைப்பு' ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ரஷ்ய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
2006 : மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2015 : சார்லசுட்டன் படுகொலை - தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
2017 : மத்திய போர்த்துகல் பகுதியில் காட்டுத்தீ பரவியதில், 64 பேர் உயிரிழந்தனர். 204 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
35 minute ago
45 minute ago