Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1913 : நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1914 : முதலாம் உலகப் போர் - அரச கடற்படை ஜேர்மானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.
1914 : முதலாம் உலகப் போர் - ஜேர்மானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.
1916 : முதலாம் உலகப் போர் - ஜேர்மனி ருமேனியா மீதும், இத்தாலி ஜேர்மனி மீது போரை ஆரம்பித்தன.
1924 : சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் – மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.
1963 : மார்ட்டின் லூதர் கிங்இ என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
1964 : ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.
1968 : சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.
1988 : ஜேர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில், 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1990 : குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
1990 : சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.
1993 : கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.
1996 : வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
1998 : பாக்கிஸ்தானின் நாடாளுமன்றம் 'திருக்குர்ஆன், நபிவழி' ஆகியவை 'அதியுயர் சட்டம்' என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.
1998 : இரண்டாவது காங்கோ போர் - காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.
2006 : திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006 : இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.
2011 : ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டோரைத் தூக்கிலிடக்கூடாது எனக் கோரி காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது பெண் போராளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago