2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் 06ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பதினாறு தினங்கள் தொடர்ந்து உற்சவங்கள் இடம்பெறவுள்ள நிலையில், 14ஆம் திகதி 108 சங்குகளால் அம்பாளுக்கு பாலாபிஷேகமும், 15ஆம் திகதி பகல் சிவபூiஐயுடன் இரவு திருமஞ்சத் திருவிழாவும், 16ஆம் திகதி பகல் விசேட கருட பூஜையும் இடம்பெறவுள்ளது.

18ஆம் திகதி இரவு சப்பறத் திருவிழாவும் மறுதினமான 19ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 20ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் 21ஆம் திகதி மாலை தெப்போற்சவத்துடன் ஆலயத்தின் உற்சவங்கள் யாவும் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .