2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 06 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மலையடிப் பிள்ளையார் கோவிலின்  மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் புதன்கிழமை  நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை காலை  எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெறும்.

புதன்கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று எதிர்வரும் 20ஆம் திகதி சங்காபிஷேகத்துடன் பெருவிழா நிறைவடையும்.

யுத்தத்தின்போது அழிவடைந்த இக்கோவிலானது மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அதிகார சபையின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .