2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பாற்குடபவனி

Kogilavani   / 2015 மே 15 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பாற்குடபவனியும் சங்காபிசேகமும் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பாற்குட பவனி மட்டக்களப்பு வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி ஊடாக அம்பாளின் ஆலயத்தை வந்தடைந்தது.

அதனைதொடர்ந்து ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூhக் குருக்கள் தலைமையில் அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றதுடன் அதனை நவோத்திர சகஸ்ர நாம 1008 சங்காபிஷேகமும் பரிபாலன மூர்த்திகளுக்கு விசேட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்று

ஆலயகொடி இறக்கத்துடன் அடியார்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டு சங்காபிஷேக நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .