2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாற்குட பவனி

Sudharshini   / 2015 மே 13 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,சத்துருக்கொண்டான் பனிச்சையடி அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு; பாற்குட பவனியும் சங்காபிசேகமும் இன்று (13) காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் சகிதம் நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடங்களை தாங்கியவாறு ஆலயத்தை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் 108 சங்குகளுக்கும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபாலன மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .