2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மெராயா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய உற்சவம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை, லிந்துலை மெராயா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை 7 மணிக்கு நித்திய பூஜையினை தொடர்ந்து புனிததீர்த்தம் எடுத்துவரப்பட்டு கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகும்.

மறுநாள் சனிக்கிழமை (02) காலை நித்திய பூஜையினை தொடர்ந்து விசேட பூஜை நடைபெறும்.

மெராயா தெப்பகுளத்திலிருந்து பாற்குடபவணி, திங்கட்கிழமை (03) காலை 7 மணிக்கு ஆரம்பித்து ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையினை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.  

செவ்வாய்க்கிழமை (04) காலை 8 மணிக்கு நடைபெறும் வசந்தமண்டப பூஜையினை தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர், மங்கள வாத்தியங்கள் முழங்க நகர் வலம் வந்து அடியார்களுக்கு அருள்புரிவார்.

புதன்கிழமை (05) காலை தீர்தோற்சவம் நடைபெற்று வைரவர் மடை பிரசாதம் வழங்கப்பட்;டு விழா இனிதே நிறைவுரும்.

லிந்துலை, மெராயா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .