2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் 01ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை (29) காலை 7 மணி தொடக்கம் இரவு 10 மணி வரைக்கும், வியாழக்கிழமை அதிகாலை 5 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 21 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கும்பாபிஷேக நிகழ்வுகள் இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள சிவாகமவிசாரதா சிவஸ்ரீ ஆர்.செல்வம்பட்டர் என்ற கல்யாணசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .