2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்

Sudharshini   / 2015 மார்ச் 25 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,வி.சுகிர்தகுமார்

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (25) காலை நடைபெற்றது.

 விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி, ஹோம பூஜை, கும்ப பூஜை நடைபெற்று, கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகக் கிரியைகளை பாண்டிருப்பு சித்திவிநாயகர் அரசடி அம்பாள் ஆலய சிவஸ்ரீ வ.கு.சிவானந்தம் குருக்கள் தலைமையில், கலாநிதி சிவ ஸ்ரீ க.கு.லோகநாதக்குருக்கள், பிரம்மஸ்ரீ இ.மங்களேஸ்வர சர்மா, சிவஸ்ரீ க.தயாபர சர்மா, சிவஸ்ரீ கே.குணசீலன் சர்மா ஆகியோரும் நடத்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .