2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

விஜயதசமியன்று பால்குட பவனி

Gavitha   / 2014 ஒக்டோபர் 03 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் மன்னார் வீதியில் அமையப்பெற்றுள்ள புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீP முத்துமாரியம்மன் ஆலயத்தின் நவராத்திரி விழாவையொட்டிய இறுதி தினமான விஜயதசமியை முன்னிட்டு பால்குட பவனி வெள்ளிக்கிழமை (03) காலை இடம்பெற்றது.

புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பால்குட பவனி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது. ஆலய நிர்வாகிகள் உட்பட பக்த அடியார்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பால் அபிஷேக பூஜைகளை ஆலயத்தின் பிரதம குரு சிவத்துவ கிரியா ஜோதி, சிவஸ்ரீ ஜே.பாலகிருஸ்ண குருக்கள் நடத்தி வைத்தார். இதே வேளை பால்குட பவனி புறப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பூஜைகளை அவ் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வேங்கட சுந்தாராம குருக்கள் நடாத்தி வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .