2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

ஆயித்தியமலை சகாய அன்னைக்கு வைரவிழா

Super User   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


ஆயித்தியமலை, புனித சதா சகாய அன்னையின் வைரவிழா கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில், கூட்டத்திருப்பலியை கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் இம்மானுவேல் பர்னாந்து, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர்.

புளியந்தீவு மரியாள் பேராலயத்தில் கடந்த சனிக்கிழமை (06) காலை 5.15 மணிக்கு இடம்பெற்ற திருப்பியை தொடர்ந்து  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஊர்வலம் ஆரம்பமாகி வலையிறவுப் பாலத்தினூடாக ஆலயத்தை சென்றடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (29) ஆலயத்தின் திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X