2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வேல் நடை ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை வேல் நடை பஜனைக் குழுவின் ஏற்பாட்டில் 13ஆவது வருடாந்த வேல்நடை  திங்கட்கிழமை (8)  நடைபெற்றது.
சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் தீர்த்த திருவிழாவை முன்னிட்டு இந்நடை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருக்கோணேஸ்வரர்  ஆலயத்தில் காலை 7.00 மணிக்கு சைவ பெரியார் ச.சுந்தரலிங்கம் இந்த வேல் நடையை ஆரம்பித்து வைத்தார்.

திருகோணமலையில் இருந்து இக்குழுவினர் எதிர்வரும் (14)  ஞாயிற்றுக்கிழமை வெருகல் ஆலயத்தை சென்றடைந்து தீர்த்த உற்சவத்தில் கலந்துகொள்வார்கள்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .