2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ராஜேஸ்வரன்


மத்திய மாகாணத்தில் கொட்டகலை நகரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த வியாழக்கிழமை (14) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மகோற்சவத்தின் 14ஆவது நாளான புதன்கிழமை (27) பிற்பகல் தேவஸ்தானத்தில் இருந்து வேட்டைக்காக புறப்பட்ட முத்து விநாயகர், கொட்டகலை நகரை சுற்றி பகத்த அடியார்களுக்கு அருள் பாலித்து நகர் மத்தியை அடைந்தார்.

அங்கு திருச்சூரக திருவேட்டைத் திருவிழா நடைபெற்றது. அதிகளவான பக்தர்கள் சூழ்ந்து நிற்க மிக பிரமாண்டமாக இந்த வேட்டைத் திருவிழா நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை (28) காலை பால்குட பவனியும் பகல் அன்னதானமும் இடம்பெறவுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X