2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கூழாவடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை(23) கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றது.

கூழாவடி மற்றும் மாமாங்கம் ஆகிய பகுதிகள் ஊடாக இந்த திருச்சொரூபம் சென்றது. 

ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் இந்த திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றது.

இதன் இறுதி நிகழ்வான திருவிழா கூட்டுத்திருப்பலியும் கொடியிறக்கமும் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்  நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை எப்.எக்ஸ்.டயஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது நற்கருணை பிரார்த்தனை மற்றும் ஆசிர்வாத நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீண்ட நீடித்த நிலைத்த சமாதானம் வேண்டு சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனது இறைவாழ்வில் வெள்ளிவிழாவினைக்கொண்டாமும் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் எப்.எக்ஸ்.டயஸ் அடிகளார் ஆலய நிகழ்வில் பங்கு மக்களால் கௌரவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் திருச்சொரூப ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது. இந்த திருவிழா நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X