2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஒட்டகப்புலம் மாதா கோவிலில் இராணு வழிபாடு

Super User   / 2014 ஜூன் 19 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப்பிரிவின் 18 ஆவது ஆண்டு நிறைவையொட்டி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் ஓட்டகப்புலம் மாதா கோவிலில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் புதன்கிழமை (18) இடம்பெற்றன.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா கலந்துகொண்ட இந்தப் பிரார்த்தனை வழிபாட்டில் அனைவருக்கும் ஆசிகள் வேண்டி வழிபாடாற்றப்பட்டது.

இதன்போது, மாதா ஆலய மதகுரு அருள்கலாநிதி மைக்கல் சௌந்தரநாயகம், உதயபெரேராவிற்கு ஆசிகளை வழங்கினார்.  

இந்நிகழ்வில் படையதிகாரிகள், சிப்பாய்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X