2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய விக்ரகங்கள் கொண்டுசெல்லும் நிகழ்வு

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்
, மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு பிரதிஸ்டை செய்யப்படவுள்ள விக்ரகங்களை கொண்டுசெல்லும் நிகழ்வு திங்கட்கிழமை (02) மாலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு புகையிரத நிலைய சந்தியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள், சிறுமிகளின் கண்கவர் நடனங்களுடன் பெருமளவு அடியார்களின் அரோகரா கோசத்துடன் இந்த விக்ரகங்கள் கொண்செல்லப்பட்டுள்ளன.

ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் திங்கட்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 06ஆம் 07ஆம் திகதிகளின் ஆலயத்தில் அடியார்கள் எண்ணெனைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .